சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2014

கிரிக்கெட் விளையாட்டில் தொடரும் விபரீதம்: பந்து தாக்கி நடுவர் மரணம்!

ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த நிலையில், நடுவர் ஒருவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களே ஆன நிலையில், இஸ்ரேலில் லீக் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹிலல் அவாஸ்கர் என்ற நடுவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட்லீக்போட்டி நடந்தது. இந்த போட்டி ஒன்றில் 55 வயதான ஹிலல் அவாஸ்கர் நடுவராக பணியாற்றினார். பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.


மரணம் அடைந்த ஹிலல் அவாஸ்கர் சர்வதேச நடுவர் ஆவார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இஸ்ரேல் அணிக்கு கேப்டனாக இருந்து உள்ளார். அவாஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment