சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Dec 2014

தகுதிக்கு கிடைத்த விருது!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன்மோகன் மாளவியா ஆகிய இருவருக்கு இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது வழங்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்திய ரத்தினம்என்று பொருள்படும் பாரத ரத்னா விருது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். சிறந்த தேசிய சேவை ஆற்றியதற்காக வழங்கப்படும் இந்த விருது கலை, அறிவியல், இலக் கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சேவை புரிந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011 ம் ஆண்டு அதன் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் கிரிக்கெட்டில் சாதனை புரிந்தமைக்காக சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

1954
ல் முதன்முதலாக வழங்கப்பட்ட இந்த விருதை டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, சர்.சி.வி.ராமன் ஆகியோர் இணைந்து பெற்றனர். அதன் பிறகு 1955 ல் ஜவஹர்லால் நேரு உள்பட மூவர் இந்த விருதைக் கூட்டாகப் பெற்றனர். 1955 க்குப் பிறகு சட்டப்படி இந்த விருதை அமரர்களுக்கும் வழங்க வழி வகை செய் யப்பட்டது. அதன்படி 10 பேர்களுக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் அடக்கம். இந்திய பிரஜை தவிர, வெளிநாட்டவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டு பாரத ரத்னா விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியானது, சச்சின் டெண்டுல்கருக்கும், சி.என்.ஆர். ராவுக் கும் இந்த விருதை அறிவித்தபோதே வாஜ்பாய்க்கும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால், அரசியல் காரணங்களால் அவர் பெயரை அறிவிக்காததால் ஆதங்கப்பட்ட பி.ஜே.பி, இந்த ஆண்டு அதனை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. 

வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதிநல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு முன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. . 

அரசியல் காரணங்களை புறந்தள்ளிப் பார்த்தால், வாஜ்பாய் பாரத ரத்னா விருதுக்கு பொருத்தமானவரே. மகத்தான சாதனைகளுக்குச் சொந்தக்காரர். பிரம்மசாரியான அடல் பிகாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தவர். 50 ஆண்டு கால பாராளுமன்ற உறுப்பினரான இவர், மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி என வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி வாஜ்பாய் மட்டும்தான். 1974 ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தவர். இமயம் முதல் குமரி வரை தங்க நாற்கரச் சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை என இவர், தன் ஆட்சியில் பல சாதனைகளை புரிந்தவர். 

சுதந்திர போராட்ட தியாகி, எம்.பி, வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் என பல பதவிகளை வகித்த வாஜ்பாய், அரசியல் நாகரிகத்தின் அச்சாணியாய் விளங்கியவர். தனி மரியாதையையும் பலரின் நன் மதிப்பையும் பெற்ற வாஜ் பாயை, ‘‘தவறான கட்சியில் இருக்கும் ஒரு நல்ல தலைவர்’’ என்று தி.மு. தலைவர் கருணாநிதி பி.ஜே.பியை எதிர்த்த ஒரு நேரத்தில் கூறியிருந்தார் 

இது தொடர்பாக தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந் தரராஜன், ‘‘21 கூட்டணி கட்சிகளைக்கொண்டு சிறப்பாக, ஊழலற்ற முறையில் ஆட்சி புரிந்தவர். அவருடைய ஆட்சி வளர்ச்சி, அமைதி நிறைந்தது. மிகத் திறமைசாலி, நல்ல எழுத்தாளர். மனிதாபிமானமுள்ளவர். எதிர்க் கட்சி தலைவராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். ஆகையால் அவர் பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெற்றவர்’’ என்றார்.

திருச்சி சிவா எம்.பி, ‘‘வாஜ்பாய் எல்லோரோடும் இணக்கமாகப் பழகக்கூடியவர். அவர் பாரத ரத்னா விருது பெற தகுதி வாய்ந்தவர். அவரைப் போன்ற தலைவர் கருணாநிதி உள்பட பலர் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்துக்குக்கொண்டு செல்கிறேன்’’என்று சொல்லியிருக் கிறார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் சுதர்சன நாச்சியப்பன், ‘‘பாரத ரத்னா விருது வழங்குவதற்கு அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எதிர்க் கட்சியில் ஓர் உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். எல்லா கட்சிகளுடனும் அனுசரணையாக நடந்துகொண்டதற்கு உதாரணமாகத் திகழ்பவர்’’ என்றார். 

தாமதமானாலும் தனது தகுதிக்கான பெருமையை பெற்றுவிட்டார் வாஜ்பாய்!



No comments:

Post a Comment