சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Dec 2012

என் அப்பா

        ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் 

செய்து   கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏறபட இராணுவ வீரன் 

போருக்குப்  போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி 

கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.போர் முடிந்து 

உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக  

போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து   வெற்றிகரமாக 

திரும்புகிறான்.

விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் 

காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் 

கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். 


அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.வீடு 

திரும்புகிறார்கள்.கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி 

வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே 

இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற   மகனைப் பார்த்து வீரன் 

கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?”அந்தச் 

சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் 

ஒன்றும் என்   அப்பா இல்லை”வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் 

அப்பா?”“தினமும் என் அம்மா  நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது 

அவரும் உட்கார்வார். படுக்கும் போது  அவரும் கூடப் படுத்துக் கொள்வார். 

அவர் தான் என் அப்பா என்று அம்மா   சொல்லியிருக்கிறாள்” வீரனுக்குக் 

காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. மனைவி சாமான்கள் 

வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் 


கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் 

தொடவில்லை. 


அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் 

இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் 

போது   தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். “இதோ என் 

அப்பா”திகைத்த வீரன்   மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. 

தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு  நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் 

கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத   குறையை உணரக் கூடாது 

என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் 

அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

No comments:

Post a Comment