சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Dec 2012

பூம்புகார்


பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:


1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல 

பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.


2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி 

செய்துள்ளது.



3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற 

ஆய்வாளர் ஆவார்.



4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் 

பயன்படுத்தப்பட்டன.



5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் 

தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.



6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.



7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் 

மறுப்புகள்  எவையும் தெரிவிக்கப்படவில்லை.





ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், 

தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.



2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட 

முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.




3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், 

இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் 

பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை 

அகழ்வாய்வு செய்ய, இந்திய    அரசு பல கோடிகளைச் செலவிட்டது. 

அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு 

எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.


4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் 

சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி 

பெறவில்லை.



5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை 

வெளிப்படுத்தி விடும்  என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் 

பணிகள் நிறுத்தப்பட்டன.


6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் 

படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் 

காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் 

தடுக்கப்பட்டன.


7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி 

வழங்கப்படவில்லை.


8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் 

போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.




9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை 

ஒளிபரப்பப்பட்டன.



10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை 

மேற்கொண்டது.



11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் 

தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.



12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள 

இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.




13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில 

ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் 

முன்வரவில்லை.



14. தமிழ்நாட்டு அரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் 

மேற்கொள்ளவில்லை.



15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் 

அகழ்வாய்வு  மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.




16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த 

கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நம்பகத்தன்மையுடையவை

யல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே 

பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவை

களாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.


18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, 

குசராத் கடல்  பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் 

பொறியாளர்  முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில்

 (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும்

அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு

 நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே 

என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய 

அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு

 முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).





19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், 

செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா 

எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் 

 திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் 

இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், 

அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், 

செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 

115-122) ( இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம்

 மாதஇதழ் ஏப்ரல் 2010) இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும்

தமிழரின். தமிழ் மொழியின்  சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி 

வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. துவாரகைக்குக் கொடுக்கப்படும்


 சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. 

சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல்

 இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று 

வருகிறது.மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி


 காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை

 நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் 

மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் 

வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால்

 தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் 

பெரும்பாடுபட்டு வருகின்றனர்.ஆனால், தமிழர்களின் பழமையான 

பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால்

 இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் 

இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது 

என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது  எவ்வளவு கொடிய 

நிலை.மறைந்து கிடக்கும் தமிழின்,  தமிழரின் மாண்புகளை, 

தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள்


 பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.



(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)




      பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் 

கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம்   ஹான்காக் 

என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 2012ல் ஆய்வு  மேற்கொண்டார்.அங்குக் கடலடி

 நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது 

என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் 

கிளன்  மில்னே உறுதி செய்தார்.பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி  

நாகரிகத்தைவிட   மேம்பட்டது என்றும் ஹான்காக்  தெரிவித்தார். 
அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், 

அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded 

Kingdom under   the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன 

காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் 

அது தொடர்ந்து  நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் 

தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும்  ஆழ் கடலடி நகரம் 

ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா  என்ற நகரம் 
கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி  கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது. 

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம்  கண்டுபிடிக்க

பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய 

ஆழ்கடல்  ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால்

 தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.



இது போல பல தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலில் மத்திய அரசு 

ஈடுபடுகின்றது .

No comments:

Post a Comment