சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Feb 2013

நான் யார் யாரைக் கடிக்கணும்



நாராயணசாமி ஒரு நாய்க்குட்டியை ஆசையாக வளர்த்து வந்தான். 

அதனுடன் பேசுவதும், விளையாடுவதுமாக, ஹட்ச் நாய் + பையன் போல இருவரும் இணைபிரியாமல் இருந்து வந்தார்கள். நாராயணசாமிக்கு தன் நாய்க்குட்டிதான் உலகமாக இருந்தது.

இப்படி இருக்கையில் ஒருநாள் நாராயணசாமி பள்ளி சென்றிருக்கும் வேளையில் நாய்க்குட்டி காரில் அடிபட்டு பரலோகம் போய்விட்டது. 

நாராயணசாமி இதை எப்படி எடுத்துக்கொள்வானோ, அவனை எப்படி சமாதானப்படுத்த போகிறோம் எனகவலைப்பட்டாள் அவன் அம்மா. 

மாலை வந்தவுடன் நாய்க்குட்டியைத் தேடினான் நாராயணசாமி . 

அம்மா மெல்ல நடந்ததைச் சொல்லி,

"
கவலைப்படாதே...நாராயணசாமி ..! உன் நாய் எங்கும் போய்விடவில்லை.. இன்நேரம் கடவுளின் மடியில் இருக்கும்..!"

நாராயணசாமி மெல்ல வினவினான்..

"
செத்துப்போன நாயை மடியில் வச்சுகிட்டு கடவுள் என்னம்மா பண்ணுவாரு..?"



அது என்ன கொடுமை? 

நம்ம நாராயணாசாமியை ஒரு வெறி நாய் கடித்து விட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், குணப்படுத்த இயலாது என்று. 

இன்னும் 15 நாள் தான் என்று...........

இதைக் கேள்விப்பட்ட நாராயணசாமியின் நண்பர் ஒருவர், கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று வந்தார். 

அப்போது நாராயணாசாமி தீவிரமாக ஏதோ எழுதிக்கொண்டிருப்பதிப் பார்த்து கேட்டார்,

"
நாராயணாசாமி...உனக்கு ஒன்றும் ஆகாது... தைரியமாக இரு... உயில் எழுத இப்போ என்ன அவசியம்..? "

அதற்கு நாராயணாசாமி சொன்னார்,

"
எவன் சொன்னான்.. நான் உயில் எழுதறேன்னு..? சாகுறதுக்கு முன்னால நான் யார் யாரைக் கடிக்கணும்ன்னு லிஸ்டுல்ல தயார் பண்ணிகிட்டுருக்கேன்..! .. கொஞ்சம் இரு.. இதோ வந்துடுறேன்..!"

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment