சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Feb 2013

"ஒண்ணும் அவசரம் இல்லை... ஒரு பதினைந்து நாள் இருந்துட்டு வாங்க"



நாராயணசாமிக்கு அப்போது 70 வயது.

ஒரு நாள் தன் 90 வயதான தனது தந்தையை அழைத்துக் கொண்டு ஒரு மனநல மருத்துவரிடம் சென்றார்.

"
டாக்டர்....எங்க அப்பா தினமும் நிறைய நேரம் பாத் ரூமில் ஒரு வாத்து பொம்மையை வைத்துக் கொண்டு தண்ணீரில் விளையாடுகிறார்" என்றார் நாராயணசாமி.

மருத்துவர் சொன்னார்,

"
இதோ பாருங்கள் நாராயணசாமி...இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை.... வயதானவர்கள் குழந்தை போல ஆகி விடுகிறார்கள்....அவர் பிறரை தொந்தரவு செய்யாத வரை இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை"

"
அது எனக்கு தெரியும் டாக்டர்...ஆனால்...."

"
என்ன ஆனால்?"

"
என்னுடைய வாத்து பொம்மையை வைத்தல்லவா விளையாடிக் கொண்டிருக்கிறார்"



நாராயணசாமி ஒரு நாடறிந்த பேச்சாளர்.

எனவே அவ்வப்போது பல ஊர்களுக்கும் சென்று வருவது உண்டு. அவர் மனைவிக்கு நாராயணசாமி மீது கொள்ளை பிரியம். 

இவரும் அப்படியே!... மனைவி எதைக் கேட்டாலும் தட்டாமல் வாங்கிக் கொடுப்பார்.

பிரசித்தி பெற்ற ஊர்களுக்கு பேசுவதற்காக நாராயணசாமி செல்லும்போது, அந்தந்த ஊர்களில் மிகப் பிரபலமானமனவற்றைப் பற்றி நகைச்சுவையாக ஏதாவது சொல்வது மனைவியின் பழக்கம்.

உதாரணமாக,திருநெல்வேலிக்கு பேசப்போகும் போது,

"
ஒரு கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி வாருங்கள்" என்பாள்.

கப்பல் துறைமுகத்துக்கு பேச சென்றால்,

"
விழாக்குழுவினர் கப்பல் ஏதும் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.. வாங்காமல் வந்துவிடாதீர்கள்" என்பாள்.

அன்றும் அப்படித்தான் நடந்தது.

சிறைச்சாலையில் கைதிகளிடையே நல்லொழுக்கத்தைப் பற்றி பேசுவதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

கிளம்புகையில் மனைவி சொன்னாள்,

"
ஒண்ணும் அவசரம் இல்லை... ஒரு பதினைந்து நாள் இருந்துட்டு வாங்க"



ஒரு முறை நாராயணசாமி,

நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக மாட்டிக்கொண்டார். அவர் அந்த ஊருக்கு புதிது. அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது. 

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார். அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததால்ல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது. அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் "நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?"

முதல் பெண் "நான் ஒரு மாடல், என்னை தவறாக கைது செய்துவிட்டனர்" என்று பொய் சொன்னாள்.

நிதிபதி "30 நாள் கடுங்காவல் தண்டனை" என்று சொல்லிவிட்டு, இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்.

இரண்டாம் பெண் "நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை" எனச் சொன்னாள்(பொய்தான்). 

நீதிபதி "உனக்கு 60 நாள் கடுங்காவல் தண்டனை" என்று சொல்லிவிட்டு மூன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

மூன்றாம் பெண் "ஐயா ! நான் ஒரு விபச்சாரி. உரிமம் பற்றி எனக்கு தெரியாது, எனக்கு வேறு தொழிலும் தெரியாது!"எனச் சொன்னாள்.

இதைக் கேட்ட நீதிபதி, "நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன். அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்" எனதீர்ப்பு கூறினார்.

இப்போது நாராயணசாமியின் முறை.

நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை நாராயணசாமியிடம் கேட்டார்.

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
ஐயா ! நானும் ஒரு விபச்சாரி. உரிமம் பற்றி எனக்கு தெரியாது, எனக்கு வேறு தொழிலும் தெரியாது !"


நாராயணசாமியும் அவரது நண்பரும் பேசிக்கொண்டிருந்தனர்.

இருவருமே மகா கஞ்சர்கள். 1 ரூபாய்கூட வீணாக செலவழிக்க மாட்டார்கள்.

நாரயணசாமியின் நண்பன் சொன்னான்,

"
உன்னைவிட நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். அதனால் என் மனைவிகு ஆகியிருக்க வேண்டியபாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்"

அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
ஹாஹா!... வீண் பந்தா பண்ணிக்கிற நீ... எனக்கு கல்யாணம் ஆனப்போ.. என்னோட தேனிலவுக்கான மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன் தெரியுமா உனக்கு"

"
தெரியாதே... எப்படிடா?" கேட்டான் நண்பன்.

நாராயணசாமி சொன்னார்,

"
என் நண்பன் ஒருத்தன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?"



ஒரு முறை நாராயணசாமியும், அவரது நண்பரும் டெல்லி சென்றார்கள்

அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை சீதாப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உண்ணத் தொடங்கினார்கள்.

நாராயணசாமி பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. 

உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

உடனே நாராயணசாமி தன் நண்பரிடம் சொன்னார்,

"
நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டேன். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே"



No comments:

Post a Comment