சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Feb 2013

நம்ம நாராயணசாமி


கூடங்குளத்திலிருந்து வந்த பேருந்திலிருந்து இறங்கினார் நாராயணசாமி.

அவரது முகத்தில் எப்போதும் போன்ற சந்தோசம் தென்படவில்லை. கவலை குடிகொண்டிருந்தது.

"
ஏதோ வருத்தத்துல இருக்குறீங்க போல?" கேட்டார் நண்பர்.

"
ஆமாம்...40 வயசு ஆயிடுச்சி..இன்னும் கல்யாணம் ஆகல"

"
அப்படியா....ஏன்?"

"
உலகத்துலேயே அழகான பொண்ணைத்தான் கட்டிக்கணுங்கிறதுதான் என்னோட விருப்பம்"

"
தேடிப்பார்க்க வேண்டியதுதானே"

"
பல நாடுகளுக்கும் போயிட்டு வந்துட்டேன்... நான் தேடுற அழகான பொண்ணு கிடைக்கல...கடந்த முறை கல்பாக்கம் போயிட்டு வந்தேன்"

"
அந்த பொண்ணு எப்படி இருந்துச்சி?"

"
அதுக்கு மூக்கு சரியில்லை"

"
இப்ப கூடங்குளத்துல போய் பார்த்துட்டு வர்ற பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நான் தேடுற பொண்ணு இவதான்...அழகோ அழகு"

"
சரி...கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே...ஏன் கவலைப்படுறீங்க"

"
அது வேறொண்ணுமில்ல...அந்த பொண்ணும் என்னை மாதிரியே "உலகத்துலேயே அழகான ஆம்பிளையைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்"னு சபதத்தோட இருக்கு"



நர்ஸ் : " டாக்டர்...போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவன் ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"

டாக்டர் :"எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே
"


நம்ம நாராயணசாமி காஷ்மிர் பக்கத்துல ஹெலிகாப்டர் ஓட்டிட்டு இருந்தார். 

கொஞ்ச நேரத்துல அந்த ஹெலிகாப்டர் மலைல மோதி வெடிச்சிருச்சி. 

அதிஷ்டவசமா உயிர் தப்பிச்சிட்டாரு நம்ம நாராயணசாமி! 

என்ன நடந்ததுன்னு விசாரிக்கும்போது அவர் சொன்னாரு,

"
ரொம்ப குளிரா இருந்துச்சு, அதனால fan' ஆஃப் பண்ணீட்டேன்"...?....!

நாராயணசாமி ஒரு "மாபெரும்" எழுத்தாளர். 

அவர் ஒருநாள் தன் நண்பரிடம்,

"
குறுகிய காலத்திலேயே நிறைய சம்பாதிக்கணும்னு நினைச்சி, ஒரு புத்தகமும் எழுதி, அதை என் சொந்த செலவிலேயே வெளியிட்டேன்"

"
ரொம்ப செலவாயிடுச்சோ?"

"
ஆமாமா...அதுக்காக இருந்த சொத்துபத்து எல்லாத்தையும் வித்துட்டேன்...ஆனால் புத்தகம் மட்டும் சரியா விற்பனை ஆகல...அதனால நடுத்தெருவுக்கு வந்துட்டேன்"

"
உங்க நிலைமையை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு...ஆமா புத்தகத்தோட பேரு என்ன?"

"15
நாளில் கோடீஷ்வரர் ஆவது எப்படி?"



No comments:

Post a Comment