சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Feb 2013

யாருய்யா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது?"


நாராயணாசாமி ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்.

அதனால "என்னை எப்படியாவது பணக்காரன ஆக்கணும்"னு கடவுளை நோக்கி வேண்டிகிட்டிருந்தாரு.

ஒரு நாள் நேர்ல வந்த கடவுள், மூணு தேங்காயை நாராயணசாமிகிட்ட கொடுத்து "எதை மனசுல நெனச்சிகிட்டு இந்த தேங்காய உடைக்கிறாயோ, அதுபோலவே நடக்கும்னு" சொல்லிட்டு மறைஞ்சிட்டாரு.

நாராயணசாமி சந்தோசமா மனைவிகிட்டசொன்னார்.

"
முதல் தேங்காயில நிறைய நகை வேணும்னு வேண்டிக்கலாம்"னா மனைவி.

"
இல்லை... தோட்டம் வேணும்னு கேக்கலாம்"னார் நாராயணாசாமி.

"
தோட்டம் வேணாங்க.. வீடு கேட்கலாம்"

அப்படி இப்படின்னு ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க... 

செம கோபமானநாராயணசாமி,

"
மயிராப்போ"ன்னு முதல் தேங்காயை உடைச்சிட்டாரு.

கணவன், மனைவி, குழந்தைகள், வீடு, பாத்திரங்கள் எல்லாம் ஒரே முடியா ஆயிடுச்சி.

அதிர்ச்சியாயிட்டாங்க ரெண்டு பேரும். 

உடனே இரண்டாவது தேங்காயை எடுத்து,

"
மயிரெல்லாம் போகட்டும்"னு உடைச்சாரு.

என்ன கொடுமை? புதிதாக வந்த முடியுடன், தலைமுடி, புருவ முடின்னு உடம்புல இருந்த முடி எல்லாமும் காணாமப் போயிடுச்சி.

வெக்கமுன்னா வெக்கம் அப்படி ஒரு வெக்கம். என்ன பண்றது?

மூணாவது தேங்காயை எடுத்து, உடைக்கிறப்போ நாராயணசாமி சொன்னார்,

"
கடவுளே!... இனி நாங்க போதும்கிற மனசோட இருப்போம்... பேராசை படமாட்டோம்.. உழைச்சி சாப்பிடுவோம்...எங்களை பழைய படியே ஆக்கிடு"



என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா."

"
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க."

"
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா
."



நாராயணசாமி ஒரு பொறுப்பான அரசு அதிகாரி.

ஒரு நாள் அரசாங்க அலுவலகம் ஒன்றிற்கு பார்வையிட வந்தார்.

ஒரு டேபிளில் இரண்டு பேர் சும்மா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்.

அதில் ஒருவனைப் பார்த்து " உனக்கு என்ன வேலை?" என்றார்.

"
ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன் " என்றான் 

இன்னொருவனைப் பார்த்து "உனக்கு என்ன வேலை?" என்றார்...

அவனும் "ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்" என்றான்...

மிகுந்த கோபத்துடன் சொன்னார் நாராயணசாமி,

"
உங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை இப்பவே வேலையிலிருந்து தூக்கறேன்.... யாருய்யா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது?"

ஒரு மிகப் பெரிய தொழிற்சாலையை நடத்தி வந்தார் நாராயணசாமி.

கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....!

ஒரு நாள் நாராயணசாமி தொழிற்சாலைக்குள் வலம் வந்தார்.

அப்போது ஒருத்தன் "மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்" அப்படின்னு படுத்து கிடந்தான்.

அவருக்கு வந்தது பாரு கோபம் 

இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார்.

"
தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டார் நாராயணாசாமி.

அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு "மூவாயிரம் ருபாய் சார்" அப்படின்னான் அவன்.

உடனே நாராயணசாமி தன் பைக்குள்ள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சிட்டு,

"
இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த பாக்டரிய நடத்தல.." அப்படின்னு சொன்னாரு..

அவன் ஒரு நிமிஷம் அவர குறு குறுன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான்எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..

அப்புறம் நாராயணசாமி எல்லாரையும் கர்வமா பார்த்து,

"
இனிமே எல்லாம் அப்படி தான்" என்று மிரட்டியபின்,

மேனேஜரை அழைத்து, "யார்யா அவன் ??" என்று கேட்டார்,

அதுக்கு அந்த மேனேஜர் சொன்னார்,

"
சார்.. அவன் டீ கொண்டு வந்த பையன்"



No comments:

Post a Comment