சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Oct 2014

எலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட்



இங்கிலாந்தில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் பஸ்களை போன்றே இந்தியாவிலும் தயாரித்து இயக்க அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இங்கிலாந்தில் அந்த நாட்டின் அரசின் நிதி உதவியுடன் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒப்டாரே பேருந்துகளை மின்சாரத்தால் இஅயங்கும் விதத்தில் வடிவமைத்து வெற்றியும் கண்டுள்ளது. அதே போன்ற தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.



அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே இந்த பேருந்துகளை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ள அசோக் லேலாண்ட். அடுத்த வருடம் ஜனவரி 22ம் தேதி டெல்லியில் நடைபெறும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்நிற்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பேருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலையை ராஜஸ்தானின் அல்வாரிலும், தமிழ்நாட்டின் திருச்சியிலும் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அசோக் லேலாண்ட் தெரிவித்துள்ளது.

இந்த இடங்களில் பேருந்து தயாரிப்புக்கு ஏற்ற அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற கண்காட்சியில் இந்த பேருந்துகளை அசோக் லேலாண்ட் அறிமுகப்படுத்திருப்பதால் இந்தியாவிலும் இதற்கு வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment