சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Oct 2014

'லிங்கா' கதை - எக்ஸ்க்ளூசிவ்!




2014ம் ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் 'லிங்கா'. 

நண்பர் ராக்லைன் வெங்கடேஷ், அண்ணன் சத்யநாராயணரா ஆகிய இருவரும்  'லிங்கா' படத்தின் தயாரிப்பாளர்கள். இவர்கள் இருவருக்காகவே ரஜினி 'லிங்கா'வில் நடிக்கிறார்படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் குட்டி ஜமீன்தார் மாதிரி இருப்பார். அணை கட்டும் இன்ஜினீயர். முறுக்கிய மீசை, சுருள்முடி கொண்ட தோற்றம். இவர் 100 சதவிகிதம் நல்லவர். 1940 களின்  காலகட்டத்தில் நடக்கும் கதையில் வருகிறார். அடுத்த ரஜினி தாதா மாதிரி தலையில் கட்டிய ரிப்பன், பரட்டை தலை, விதவிதமா உடைகள் கொண்ட கேரக்டரில் இளைஞர்களைக் கவர்வார். இவர் 25 சதவிகிதம் நல்லவர் 75 சதவிகிதம் வில்லன்.




கதை:
 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. அதைப் போக்குவதற்காக கலெக்டர்  ரஜினி இன்ஜினீயராகி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறார். அப்போது சமூக விரோதக் கூட்டம் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது. ''எனக்கு இந்துவும் வேணாம், கிறித்தவரும் வேணாம். முஸ்லிமும் வேணாம். செட்டியார், முதலியார், நாடார் வேணாம். இந்தியனா இருக்குறவங்க மட்டும் என் கூட வாங்க '' என்று ரஜினி அழைக்கிறார். மக்கள் படை திரண்டு வருகிறது. அவர்களோடு இணைந்து அணை கட்டுகிறார்.
ஊர் நாட்டாமை விஜயகுமார் ரஜினியை நினைத்துப் பெருமைப்படுகிறார். அணை கட்டுவதற்கு உதவியாகவும், ரஜினிக்கு ஆறுதலாகவும் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா சந்தோஷப்படுகிறார். அப்போதுதான் நடக்கக்கூடாத  அந்த விபரீதம் நடக்கிறதுஆங்கிலேயருக்குக் கைத்தடியாக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் அணை திறப்பு விழாவிற்கு வரும் ரஜினியை அவமானப்படுத்துகிறார். இதனால், மனம் கலங்கும் ரஜினி அணை திறக்காமலேயே சென்றுவிடுகிறார். ரஜினியுடன் சோனாக்ஷி சின்ஹாவும், சோனாக்ஷி தந்தை ராதாரவியும் சென்றுவிடுகிறார்கள்.
அதற்குப் பிறகு அந்த அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.

அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. எந்த இடத்தில் வைரம் கிடைத்தாலும் அதைக் கொள்ளையடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். அவரை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அணை வழியாக வரும் ரஜினி அங்கேயே தலைமறைவாகி விடுகிறார். அப்போதுதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒளிந்திருந்து வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார். அந்த சமயத்தில் பெரியவர் ரஜினியை சந்திக்கிறார். மனம் திருந்துகிறார்.  

                                     

பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டுக் மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை .

அனுஷ்கா வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடிக்கும் வீராங்கனையாக நடிக்கிறார். தாதா ரஜினிக்கு அனுஷ்காதான் ஜோடி. 

தேவ் கில் சமூக விரோதக் கூட்டத்தில் கலகம் செய்யும் நபராக நடிக்கிறார். பெரியவர் ரஜினியுடன் மோதும் தேவ் கில் சிறைக்குச் செல்கிறார். தண்டனை முடிந்துவந்த உடன் மீண்டும் ரஜினியுடன் மோதுகிறார். 

படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வாய்ப்பு இருப்பதாலோ என்னவோ ரஜினி - சோனாக்ஷி சின்ஹா ஆடிப் பாடும் பொங்கல் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதில் ஊர் மக்களுக்கு பொங்கல் வேட்டி - சேலைகளைக் கொடுப்பதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment