சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Oct 2014

தீர்ப்பால் ஜெ.வின் அரசியல் எதிர்காலம் பாதிக்காது: சோ


சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதாவின் எதிர்காலத்தை பாதிக்காது என்று நடிகரும், எழுத்தாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,"சொத்துக் குவிப்பு வழக்கில் .ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 4 வருட சிறை தண்டனை உண்மையில் அவருக்கு பெரும் பின்னடைவுதான்.இதற்காக அவரை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது.




ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் எதையோ நினைத்து எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர ஏராளமான சட்டவழிகள் உள்ளன.எனவே அவர் மீண்டு வருவார். மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தன்மை தமிழக மக்களிடம் அவர்மீது பெரியளவில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளதுதான் உண்மை. இதுவரை இப்படியொரு அனுதாபம் யாருக்கும் கிடைத்ததே இல்லை. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு நிச்சயமாக அவருக்கு பாதிப்பு இல்லை. தமிழகத்துக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். இது கடந்த திமுக ஆட்சியில் நடந்த அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் புரியும்" என்றார்.

No comments:

Post a Comment