சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Jul 2013

தலைமுடி உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?


சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும், தலை சருமமும் சுத்தமாக இருக்கும்.இதனால் முடி உதிர்வது நிற்கும். இதனால் தொற்று, பொடுகு வருவதை தவிர்ப்பதால் முடி உடைவதும், உதிர்வதும் கணிசமான அளவு குறையும். முடி சுத்தமாக இருப்பதால் தோற்றத்துக்கும் பலம் சேர்க்கும்.

வைட்டமின் A  தலையிலுள்ள சுரப்பிகள் நன்றாக சுரக்க உதவி செய்யும்வைட்டமின் E தலைசருமத்திற்கு கீழே உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.வைட்டமின் B  முடியின் கருமை நிறத்தை காக்கும். கொழுப்பில்லாத இறைச்சி, மீன்கள், புரதச்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொளவதால் முடி உதிர்வது நிற்கும்.

                             

பல மாதங்களாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் ஆலிவ் மற்றும் நல்லெண்ணெய் கொண்டு வாரம் இருமுறை தலைக்கு மசாஜ் செய்துவர முடி கொட்டுவது குறையும். இது மயிர்சுரப்பிகளை சுறுசுறுப்பாக்க உதவும்.

தலைக்கு குளித்தவுடன் இயற்கையாகவே காய வைக்கவேண்டும்.மேலும் முடி ஈரமாக இருக்கும் பொது தலை சீவ கூடாது.அப்படி சீவவேண்டும் எனில் அகன்ற பற்களை உடைய சீப்புகளை கொண்டே சீவ வேண்டும் அதேபோல அடிக்கடி சீவுவதை நிறுத்திவிடுங்கள்.இது முடியை வலுவிழக்க செய்து கொட்டுவதை அதிகமாக்கும்.முடிந்தவரை முடியில் ஏற்படும் சிக்கல்களை கைகளை கொண்டே சரி செய்யுங்கள்.

தலைமுடி தண்டில் நான்கில் ஒரு பகுதி தண்ணீர் உள்ளது. அதனால் தினமும் 4-8 கப் தண்ணீர் பருக வேண்டும். இது வளமான முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

முடி கொட்டுவதை உணர்ந்தீர்கள் என்றால், மது பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மது, முடி வளர்ச்சிக்கு தடை போடும். அதனால் குடி பழக்கத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, தலை முடி வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.

முடியை கருவிகள் மூலம் அடிக்கடி உலர்த்தவோ அல்லது சூடாக்கவோ முயற்சிக்க கூடாது. அடிக்கடி அப்படிச் செய்தால், முடியில் உள்ள புரதச்சத்து வலுவிழந்து போகும். முடியின் சத்தும் குறைந்து, முடி கழிதலுக்கு வழிவகுக்கும்.

எண்ணெய் பசையுடன் கூடிய முடியை கொண்ட ஆண்களுக்கு, கோடைக்காலத்தில் வியர்வை உண்டாவதால் பொடுகு அதிகரிக்கும். இதுவே முடி கொட்டவும் காரணமாக அமையும். கற்றாழை மற்றும் வேப்ப இலைகளைக் கொண்டு செய்யப்பட்ட ஷாம்புவை பயன்படுத்தினால், தலை குளிர்ச்சியோடு இருப்பதோடு, பொடுகிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
கோடைக்காலத்தில் ஹெல்மெட் அணியும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் அணிவதால், வியர்வையானது தலையில் உள்ள துளைகள் வழியாக உள்ளிறங்கும். அதனால் முடியின் வேர்கள் வலுவிழக்கச் செய்து, முடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே தலையை சுற்றி ஸ்கார்பை கட்டிக் கொண்டால் முடி உதிர்வு குறையும்.

முடி கழிகிறதா,முடியை தளர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் போனி டைல், பின்னல் போன்ற ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்கி முடியை உதிரச் செய்து சீக்கிரமே வழுக்கையும் விழச் செய்யும்.

                   

சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். அதில் ஒன்று தான் முடி உதிர்வு. ஆகவே எப்போதும் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு, பக்க விளைவுக்களை பற்றி அறிந்து கொண்டு, பின் மருந்துகளை வாங்கவும். அப்படி முடியை பாதிக்கும் படி பக்க விளைவு ஏற்பட்டால், மருத்துவரை வேறு மருந்துகளை மாற்றி தரச் சொல்லவும்.

கடுமையான ரசாயனங்கள் மற்றும் நிரந்தர முடிச் சாயங்கள், முடியின் ஆரோக்கியத்தை பாதித்து விடும். முடி கொட்டும் போது தலை முடிக்கு சாயம் பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !

No comments:

Post a Comment