சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Jun 2013

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்ததினம் இன்று...


பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை..
திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்.
ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம்.பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்!

                                             

முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது ` சாந்தி நிலையம்படத்துக்காக ` இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணிதான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது ` அடிமைப் பெண்படப் பாடலான ` ஆயிரம் நிலவே வா ’!

பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ்என மூன்று மொழிகளில் 50 படங்களுக்குமேல் நடித்திருக்கிறார். ` கேள டி கண்மணி ’, ` காதலன்இரண்டும்  இன்றும் நினைவில் நிற்பவை!

எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். ` சங்கராபரணம் ’,` ரூத்ர வீணா ’, ` ஏக் துஜே கேலியே ’, ` மின்சாரக் கனவுஎன இவர் பாடியதெல்லாம் ஒலி பரப்பாகாத நாளே இல்லை!

"
ஏக் துஜே கேலியே ’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு!

இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள் இருவரும் ` வாடா, போடாஎனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்!

                                

சுத்தமான சைவ உணவுப் பழக்கம், இவ்வளவு பெரிய ஆகிருதிகொண்ட இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்... இஷ்டஉணவு!

இதுவரை 42,000 பாடங்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்!

எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்!

மூச்சுவிடாமல், ` கேளடி கண்மனியில் ` மண்ணில் இந்தக் காதல் ’ ` அமர்க்களம்பட ` சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்!

எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி,  ஜேசுதாஸ். முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார்.  டி.எம்.எஸ். அண்ணா பாடிய எந்தப் பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்!

எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல் ` ஆயிரம் நிலவே வாஅந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி.அழைக்கப்பட்டபோது, குளிர் காய்ச்சலில் இருந்தார். ` ரெஸ்ட் எடு, நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர் பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய் மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு! ’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்!

கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பி-யின் தணியாத தாகம், விரைவில் ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்!  பிடித்த இசையமைப்பாளர் இளையராஜாதான். .ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், ` ராஜா... ராஜாதான்என்கிற கட்சி!

மழைபடத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலை பாடினார். அவர் ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்துவைத்து பாடி வெளியேறியது எல்லாம் 12 நிமிடங்களில் முடிந்துவிட்டது!

எம்ஜிஆர்  சிவாஜி அவர்களுக்கு T.M. சௌந்தராஜன் அவர்களது குரல் எப்படி பொருத்தமாக இருந்ததோ  அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் இருவருக்கும் இவரது குரல்தான் தமிழகத்தில் ட்ரெட் மார்க். அதிலும் ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு ஓபனிங் சாங் அதிகமாக இவர்தான் பாடினார்.

கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி.  சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்!




`
துடிக்கும் கரங்கள்படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்!

பிறந்த தினம் ஜீன் 4, 1946.  இப்போது65 வயதாகிறது. இன்றும் பிஸியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை!

`
முதல் மரியாதைபடத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!

ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை. ` எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சுஎன இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்!

சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரகள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை. ஏனோ, இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம். சினிமாவையும் வீட்டையும் தள்ளித் தள்ளியே வைத்திருக்க விரும்புவார்!

எஸ்.பி.பி பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழி கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்!

எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு!

தெலுங்குப் படங்களில் நிறைய ` ராப்பாடல்கள் எழுதியவர். ` கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலுஎன இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!

கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி-யைக் குறிப்பிடுகிறார்கள். மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள்அதிகம்!

No comments:

Post a Comment