சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Jun 2015

சென்னையை குறிவைக்கும் கொலம்பியா கொள்ளையர்கள்

'எக்ஸ்கியூஸ் மி சார்... இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது ?

வைர நகை கொள்ளை தொடர்பான எத்தனையோ தமிழ் சினிமாக்களைப் பார்த்து​விட்டோம். இதோ  இப்​போது அது நிஜத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த 21-ம் தேதி சென்னை அண்ணா​சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஜூவல்லரி கண்காட்சியில் 38 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.  

ஜூவல்லரி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ‘யுனைடெட் எக்ஸ்சிபிசன்’ என்ற நிறுவனத்தின் திட்ட ஒருங்கி ணைப்பாளர் மனோஜிடம் பேசினோம். ‘‘இது எங்களுடைய  31-வது கண்காட்சி. முதல் தடவையாக இந்தக் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கண்காட்சியில் பங்கேற்கும் ஜூவல்லரி நிறுவனங்களுக்கு முழு அளவில் பாதுகாப்புகளை வழங்கியிருந்ததோடு  சி.சி.டி.வி கேமராவையும் பொருத்தியிருந்தோம். சுதாரிப்புடன் செயல்பட்டதாலேயே அந்தக் கொள்ளையனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம்’’ என்றார்.
தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ‘‘கண்காட்சியில் இருந்து அழைப்பு வந்தவுடன் போலீஸ் படையுடன் ஆஜராகி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒரு வெளிநாட்டுக்காரனைப் பிடித்து விசாரித்தோம். அவனது பெயர் ஜோஸ் ஒசாரியோ பர்க். கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவன். பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவனை சிறையில் அடைத்துவிட்டோம். ஜோஸுடன் இன்னும் சிலர் வந்துள்ளனர். அவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை’’ என்றார் சுருக்கமாக.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்​தோம். ‘‘வைர, தங்க நகை கண்காட்சியில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது   சாதாரணம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எழும்பூரில்கூட ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதிலும் சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். அதில் கொள்ளைப்போன வைர, தங்க நகைகளும், கொள்ளையனும் இதுவரை பிடிபடவில்லை. இதுதவிர ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
கண்காட்சி குறித்த விவரங்களை கூகுள் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளும் சர்வதேச கொள்ளைக் கும்பல், சம்பவ இடத்துக்கு வந்து நோட்டமிடுகிறார்கள். கண்காட்சி முடிந்து வைர, தங்க நகைகளை போதிய பாதுகாப்பில்லாமல் திரும்ப எடுத்துச் செல்லும்போது கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தற்போது நடந்திருக்கும் கொள்ளை முயற்சி சம்பவத்திலும் இதுபோன்றே கொள்ளையர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். கண்காட்சியில் கலந்துகொண்ட சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள அம்ரபாலிக் என்ற ஜூவல்லரி நிறுவனத்தின் வைரங்களை டிராவல்ஸ் பேக்கில் அடைத்து காருக்குள் ஏற்றிய டிரைவர் ஓட்டலிலிருந்து வெளியே வந்தார்.
அப்போது வெளிநாட்டுக்காரன் ஒருவன், டிரைவரிடம் ஒரு விசிட்டிங் கார்டை நீட்டி இந்த அட்ரஸ் எங்கு இருக்கிறது என்று முதலில் ஸ்பெயின் மொழியில் கேட்டுள்ளான். எதுவுமே புரியாமல் டிரைவர் முழிக்க... பின்பு அந்த வெளிநாட்டுக்காரன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில், ‘எக்ஸ்கியூஸ் மி சார்... இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டு இருக்கிறான். விசிட்டிங் கார்டை வாங்கி அதற்கு பதிலளித்த டிரைவர், யதேச்சையாக காரின் பின்பகுதியைப் பார்த்துள்ளார்.

அப்போது காருக்குள் இருந்த வைர நகை டிராவல்ஸ் பேக்கை இன்னொரு வெளிநாட்டுக்காரன் எடுக்க முயல... ‘திருடன், திருடன்’ என்று டிரைவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஹோட்டல் பாதுகாவலர்கள் வர... வெளிநாட்டுக் கொள்ளையர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். பிடிபட்ட கொள்ளையன் ஜோஸ், சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவன். இவர்கள் அனைவரும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து ஜூவல்லரி கண்காட்சி நடக்கும் இடங்களுக்கு வந்து கைவரிசை காட்டிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிவிடுகின்றனர். இதனால் இவர்கள் எளிதில் போலீஸில் சிக்குவதில்லை. மேலும் போலீஸில் சிக்காமலிருக்க ஒருமுறை கொள்ளையடித்தவனை அடுத்த சம்பவத்தில் இவர்கள் ஈடுபடுத்துவதும் கிடையாது. இதற்கென தனி நெட்வொர்க் ஒன்று செயல்படுகிறது. கொள்ளையடிப்பதற்கு என தனியாக டிரெயினிங்கும் கொடுக்கப்படுகிறதாம்’’ என்றனர்.
நகை வியாபாரிகளே உஷார்!


'

No comments:

Post a Comment