ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் ஹர்பஜன் சிங் இருக்கையில் வெறும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானேவை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்க பல காரணங்கள் இருக்கின்றன.
முதலில் ரஹானே அமைதியானவர். இவரை பற்றி எந்த சர்ச்சையும் கிடையாது. கோலியை போல அடாவடி கிடையாது. தோனியை போல் வாயையும் அடிக்கடி திறந்து சர்ச்சையில் சிக்கும் பழக்கம் கிடையாது. கூச்ச சுபாவம் கொண்ட ரஹானே, எதையும் பேட் மூலம்தான் எதிர்கொள்வார். சிறுவயது முதலே பெற்றோர்க்கு அடங்கிய பிள்ளை. இவரது கூச்ச சுபாவத்தை போக்க, அவரது தந்தை இளம் வயதில் கராத்தே வகுப்பில் சேர்த்து விட்டார். அதில், ஜுனியர் பிரிவில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய பின்னர் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.
சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த ரஹானேவின் வலுவான ஷாட்கள் பிரமிப்பை ஏற்படுத்தியவை. கடந்த ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையடினார். அந்த அணியின் ஆலோசகரான ராகுல் டிராவிட்டின் அறிவுரைகள், ரஹானேவை மேலும் மேலும் பட்டை தீட்டியது. ரஹானே அமைதியான குணம் கொண்டிருந்தாலும் கேப்டனாக சிறப்பாக பிரகாசிக்க முடியுமென்று நம்புகிறார். இது குறித்து ரஹானே கூறுகையில், ''கராத்தேவில் சேர்ந்த போதும் என்னை கேலியும் கிண்டலும் செய்னதர். அதில் சாதித்தது போல் கேப்டன் பதவியிலும் சாதிப்பேன்" என்கிறார்.
இந்திய அணியை பொறுத்த வரை விரைவில் தோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக் கூடும். அதற்கு பின், கோலி கையில் முழுமையாக கேப்டன் பொறுப்பு ஒப்படைக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது, கோலிக்கு நல்லதொரு துணை தேவை. அதற்கு தயார்படுத்தும் விதத்தில்தான் இந்த கராத்தே வீரன் கையில் இந்திய அணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்பஜனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால், ரஹானேவுக்கு கேப்டனாக தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஹர்பஜன் கிட்டத்தட்ட ஓய்வை நெருங்கி விட்டவர். அணிக்கே அவ்வப்போதுதான் அவர் தேர்வு செய்யப்படுகிறார். இந்திய அணிக்கு வருங்காலத்தில் நல்ல கேப்டனை உருவாக்கும் பொருட்டே மகராஷ்டிராவை சேர்ந்த 27 வயது ரஹானேவை தேர்வுக்குழுவினர் நியமித்துள்ளனர்.
சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த ரஹானேவின் வலுவான ஷாட்கள் பிரமிப்பை ஏற்படுத்தியவை. கடந்த ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையடினார். அந்த அணியின் ஆலோசகரான ராகுல் டிராவிட்டின் அறிவுரைகள், ரஹானேவை மேலும் மேலும் பட்டை தீட்டியது. ரஹானே அமைதியான குணம் கொண்டிருந்தாலும் கேப்டனாக சிறப்பாக பிரகாசிக்க முடியுமென்று நம்புகிறார். இது குறித்து ரஹானே கூறுகையில், ''கராத்தேவில் சேர்ந்த போதும் என்னை கேலியும் கிண்டலும் செய்னதர். அதில் சாதித்தது போல் கேப்டன் பதவியிலும் சாதிப்பேன்" என்கிறார்.
இந்திய அணியை பொறுத்த வரை விரைவில் தோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக் கூடும். அதற்கு பின், கோலி கையில் முழுமையாக கேப்டன் பொறுப்பு ஒப்படைக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது, கோலிக்கு நல்லதொரு துணை தேவை. அதற்கு தயார்படுத்தும் விதத்தில்தான் இந்த கராத்தே வீரன் கையில் இந்திய அணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்பஜனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால், ரஹானேவுக்கு கேப்டனாக தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஹர்பஜன் கிட்டத்தட்ட ஓய்வை நெருங்கி விட்டவர். அணிக்கே அவ்வப்போதுதான் அவர் தேர்வு செய்யப்படுகிறார். இந்திய அணிக்கு வருங்காலத்தில் நல்ல கேப்டனை உருவாக்கும் பொருட்டே மகராஷ்டிராவை சேர்ந்த 27 வயது ரஹானேவை தேர்வுக்குழுவினர் நியமித்துள்ளனர்.
No comments:
Post a Comment