சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 May 2015

அமேசானின் மூன்று நாள் சம்மர் சேல்ஸ்: எதிர்கால விற்பனை உத்தியா?

-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 'கிரேட் இந்தியன் சம்மர் சேல்ஸ்' என்ற பெயரில் மூன்று நாள் ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விற்பனை துவங்க உள்ளது. இது ஏற்கனவே ஃப்ளிப்கார்ட் நடத்திய 'பிக் பில்லியன் டே' போன்ற விற்பனைதான் என்றாலும், இதிலும் ஒரு புதிய விற்பனை உத்தியை கையாண் டுள்ளது அமேசான். 

மிந்த்ரா நிறுவனம் ஏற்கெனவே இணையதள சேவையை நிறுத்திவிட்டு, ஆப்ஸ் மூலம் மட்டும் விற்பனையை தொடர்ந்து வருகிறது. இதேபோல் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் ஆப்ஸ் மூலம் மட்டும் பொருட்களை விற்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.


மொபைல் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்பதாலும் தங்களது விற்பனையை ஆப்ஸ்கள் மூலம் தொடர முடிவு செய்து அதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஃப்ளிப்கார்ட் ஆப்ஸ் பர்சேஸ் டே என்றெல்லாம் ஆஃபர்களை வழங்கி, தங்களது ஆப்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தியது.

அமேசான் சம்மர் சேல்

இந்நிலையில் அமேசான் நிறுவனமும் மற்ற நிறுவனங்களுடனான போட்டியை சமாளிக்க கிரேட் இந்தியன் சம்மர் சேல்ஸ் என்ற பெயரில் மூன்று நாள் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரை நீங்கள் ஆப்ஸ் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி ஸ்டேட் பேங்கின் கார்டை பயன்படுத்தி கூடுதல் 15 சதவிகித கேஷ் பேக் ஆஃபரை ஆப்ஸ் பயன்பாட்டாளர்கள் பெறலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. இந்த ஆஃபரை பிரபலபடுத்த சமூக வலைதளங்களில் #Whatteydeal என்ற ஹேஷ்டேக்கை பிரபலப்படுத்தி வருகிறது.

விற்பனை உத்தியை கையாளுகிறதா அமேசான்?

மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே ஆப்ஸை பிரபலப்படுத்தி ஆப்ஸில் மட்டுமே இனி விற்பனை செய்ய போகிறோம் என கூறிய நிலையில் அமேசான் இந்த ஆஃபர் மூலம் தன் ஆப்ஸை பிரபலப்படுத்தியது மட்டுமின்றி இணையதளம் மூலமாகவும் தங்களது சேவையை தொடருகிறது. இந்த ஆஃபரில் ஆப்ஸ் மூலம் வாங்குபவருக்கு 15 சதவிகிதம் கேஷ் பேக் ஆஃபர் வழங்கியது போல், இணையதளம் மூலமாக வாங்குபவருக்கு 10 சதவிகித கேஷ் பேக் ஆஃபரை வழங்கியுள்ளது அமேசான். 

பிற்காலத்தில் ஆப்ஸ் தான் எல்லாம் எனும் போது ஆப்ஸிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் வாடிக்கையாளர் விவரங்களை பெறவும் இந்த ஆஃபர் உதவியாக இருக்கும் என்ற உத்தியில் இந்த ஆஃபரை அணுகியுள்ளது அமேசான். உங்களது இணைய வேகம் எந்த அளவில் இருந்தாலும் அதற்கேற்ப இயங்கும் விதத்தில் இந்த ஆப்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பது இதில் கூடுதல் தகவல்.

இந்த ஆப்ஸை ஒருவர் டவுன்லோட் செய்து விட்டால் அவருக்கு தொடர்ந்து இந்த ஆப்ஸிலிருந்து பொருட்களுக்கான தவல்கள் வந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளரை தொடர்ந்து இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தோடு இணைப்பில் வைத்திருக்க முடியும் என்பதே இந்த நிறுவனங்களின் கணிப்பு.



மூன்று நாட்கள் ஆஃபரில் விற்பனை மற்றும் இன்றி மிகப்பெரிய எதிர்கால விற்பனை உத்தியையும் கையாண்டுள்ளது அமேசான். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர் “அவர்கள் எத்தனை முறை எங்களுக்கு ஆஃபரை அளித்தாலும் நாங்கள் தேவை இருந்தால்தான் வாங்குவோம்" என்கின்றனர். 

இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்த ஆஃபர் இம்பல்ஸிவ் பர்சேஸை அதிகரிக்கும் என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளன.



No comments:

Post a Comment