சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 May 2015

மூடப்பட்ட திரை அரங்கங்களும், மூழ்கிப்போன தயாரிப்பாளர்களும்!

தோ டூ வீலரில் போறாரே, எங்கோ பார்த்த மாதிரி இருக்குதே 'என காயலான் கடைக்கு  போகும் நிலையில்  உள்ள டூ  வீலரில்   சிலரை சென்னையில் பார்த்தீர்கள் என்றால் அவர் படம் எடுத்து பிச்சை  எடுக்கும் நிலைக்கு வந்து விட்ட சில தயாரிப்பாளர்கள் ஆக  இருக்கக் கூடும். தயாரிப்பாளர்களின் இன்றைய நிலைக்கு ஆஸ்கார்  ரவிச்சந்திரனின் சொத்து முடக்கம் செய்தி ஒரு ஆதாரம்.

ஏவிஎம் ,சூப்பர் குட் பிலிம்ஸ் போன்றவை இன்று எங்கு உள்ளன என தேடி பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பல திரை அரங்குகள்`மூடப்பட்டு விட்டன.சென்னையில் பழமையான தியேட்டர்கள் மூடப்பட்டு வணிக வளாகங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன  வசந்தி, நடராஜ், காமதேனு, பைலட், ஆனந்த், பாரகன், ராஜ குமாரி, நாகேஷ் என 50-க்கும் மேற்பட்ட பிரபலமான தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.  


திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்டார் தியேட்டர் மூடப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஜெயலலிதா குழந்தையாக இருந்தபோது தாய் சந்தியாவுடன் இந்த தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததாக சொல்லி 'பெருமை'ப்பட்டுக்கொள்வார்கள் இதன் ரசிகர்கள். 
 
இனி படம் எடுத்தால் திருவோடுதான் என அறிந்து  காலமாற்ற சுனாமியால் பாதிக்கப்படாத சூத்திரம் தெரிந்த  சில தயாரிப்பாளர்கள், சில இயக்குனர்கள்  படம் எடுக்காமல், அப்பா கேரக்டர்களிலும், காமெடி கேரக்டர்களிலும் நடித்து தங்களை காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்களில் டைரக்டர் சுந்தர்ராஜன், அன்பாலயா பிரபாகரன், மனோபாலா போன்றவர்களை குறிப்பிடலாம். 

அனைத்து திறமைகளையும் கொண்ட சிலர் படம் எடுக் காமல் 'அம்மாடி ஆத்தாடி' என டிவி க்களில் தோன்றி சில்லறை தேத்தி கொண்டும் ,சினிமாவில் கெஸ்ட் ரோல் பாடல்களில் காசு பண்ணிகொண்டும் காலத்தை ஓட்டுகின்றனர்.

சினிமா உலகின் இன்றைய மோசமான நிலைக்கு  காரணம் cd ,dvd என காரணம் சொல்லப்பட்டாலும், இவையெல்லாத்திற்கும் காரணம்  கால மாற்றம். இப்போது 45 வயதுக்கு மேற்பட்டோர் தியேட்டருக்கு போவதில்லை. இளைய தலைமுறைதான் ஒவ்வொரு படத்தின் ஓட்டத்தையும் நிர்ணயிக்கிறார்கள்.  

அவர்கள்  உதிர்க்கும் 'நல்லா இல்ல , நல்லாவே இல்லை 'முதல் பாதி சப்ப - இரண்டாம் பாதி மொக்க '. ''இசை இம்சை ' -இப்படி பல கமெண்ட்களும் 'பாக்கெட் மணிக்கு பங்கம் -பணத்தை  வேஸ்ட் பண்ணாதீங்க ' என்ற இலவச அட்வைஸ்களாக முகநூல், டிவிட்டர்.  வாட்ச் அப் களில் முன்கூட்டியே  எச்சரிக்கை மணி அடித்துவிட,  பலர்  படம் பார்ப்பதில்லை . 

அவர்கள் மேல் சினிமாக்காரர்கள்  பாய்வதில் அர்த்தமில்லை. அடிக்கும் கமெண்ட்களும் பெரும்பாலும்  சரியாகத்தான் இருக்கின்றன. கோடிக்கணக்கில் நடிகர்களுக்கு கொட்டி அழுது விட்டு, தங்கள் தலையில்  துண்டு போட்டுக்கொண்ட நிலைக்கு  வந்துள்ளார்கள் விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் .

சினிமா என்னும் சதுரங்க வேட்டையில் ராஜா ராணிகளாக நடிக, நடிகைகள் .இவர்கள் தங்கள் சம்பளத்தை  கோடிகளில் கூட்டிக்கொண்டு வெளியில் மக்களுக்கு ஆபத்பாந்தவர்களாகவும், மக்களை காப்பாற்ற வந்த ரட்சகர் களாகவும்  நடிக்கிறார்கள் .
ஆனால் இந்த வேட்டையில் தயாரிப்பாளர்கள் வெட்டப்படும் சிப்பாய்களாக மாறிப்போனதுதான் பரிதாபம் !!



No comments:

Post a Comment