சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 May 2015

தென்மாவட்டங்களின் ஏக்கம் தீருமா?

டக்கு வாழ்கிறது தெற்கு  தேய்கிறது 'என பேரறிஞர் அண்ணா சொன்னார். அது தென் மாநிலங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு பொருந்தும். தமிழ்நாட்டின் எந்த வளர்ச்சி திட்டங்கள் வந்தாலும் சென்னையிலோ அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கோத்தான் படை எடுக்கின்றன.
தென் மாவட்டங்களில் 68 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் (யூனிட்டுகள்) இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சென்னையை சுற்றிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் உள்ளன.
 

தென் மாவட்ட மக்கள் தம்முடைய தனித்தன்மையை இழந்து வருகிறார்கள். மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் போன்றவற்றில் தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. விவசாயமும் பொய்த்தது. தொழிற்துறையும் கைவிடப்பட்டது. கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக தென் மாவட்ட மக்களின் இடப்பெயர்வை எந்த அரசும் தடுக்கவில்லை. தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் தொழில் துறையில் மிகவும் பின்தங்கி உள்ளன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற தி.மு.க. ஆட்சியில் துவக்கப்பட்ட நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவின் கதி அதோகதியான நிலையில்தான் உள்ளது. இதுதான் இப்படி என்றால், தொடர்ந்து மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் அதற்கான வழிகள் காணப்படவில்லை. அதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்றும் திட்டம், கடந்த பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்டிருந்தது. அது பற்றியும் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்கி இருப்பதால்தான் சாதி மோதல்கள் அடிக்கடி நடக்கின்றன. அரசு இந்த அபாயத்தை உணர்ந்து தென் மாவட்டம் ஒவ்வொன்றிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கவேண்டும். தென் மாவட்டங்களில் புதிய தொழில் தொடங்குவோருக்கு சலுகைகள் தர வேண்டும்.
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில்,  தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களுக்கு மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்

மருத்துவ வசதி மேம்பட மத்திய அரசின் AIIMS மருத்துவ கல்லூரியை தென் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.

இப்படி செய்தால்தான் ஒரு பக்கம் வளர்ச்சி, இன்னொரு பக்கம் வீக்கம் என்ற நிலைமாறும்; தென் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய மக்களின் ஏக்கமும்  தீரும்! 


No comments:

Post a Comment