சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2013

'சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்'’



சாக்ரடீஸின் கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, " என்னை மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைக்குள் நான் பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது! வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுககு கோபம் ஏதும் இல்லையே?’ " என்று குரல் உடைந்து அழ, எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான சாக்ரடீஸ் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?.

எனக்கு விஷம் தயாராக இருக்கிறதா?”
அவருடைய முதன்மை சீடர் கரீட்டோ கண்ணில் நீர்வழிய,’அவசரமில்லை சாக்ரடீஸ், இன்னும் அஸ்தமனம்  கூட ஆகவில்லை. சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக கொள்ளலாம்என்றார் பதற்றமாக.

'‘
நான் கடைசிவரை ஆர்வத்துடன் உயிரைப் பாதுகாத்துக் கொண்டதை வரலாறு பதிவு செய்ய வேண்டுமா கரீட்டோ?  அது சற்று முட்டாள்தனமாகத் தோற்றமளிக்காதா?’ என்றுவிட்டு உடனே விஷக் கோப்பையை கொண்டுவரச் சொன்னாராம். தன் சாவு பற்றி எவ்வளவு துல்லியமான, தெளிவான அறிவு அவருக்கு இருந்திருந்தால் சாவு எனும்வாழ்வின் ஒருமுறைநிகழ்வுககு அவ்வளவு தயாராய் இருந்திருப்பார்?.

                      

தன் சாவு- நிச்சயமான ஒன்று என்கிற அறிவு,அதிகார வர்க்கம் அவருக்கு அளித்திருந்த தண்டணையே சாவு என்கிற பகுத்துப் பார்க்கிற அறிவு, அவருக்கு இருந்ததால்தான் அவரால் சாவு என்பது ஒரு வாழ்வின் (கடைசி) நிகழ்வு என்கிற சாவகாசத் தன்மையோடு அமைதி காக்க முடிந்திருககிறது. விஷத்தை  அருந்திய சாக்ரடீஸ்,’அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று அதிகாரியிடம் கேட்டிருக்கிறார். பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை சற்று முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தார்.

அதனால்தானோ என்னவோ அவர் இறந்த பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, ‘அவர் இறந்துவிட்டார்என்றோ,’பரலோக ப்ராப்தி அடைந்தார்என்றோ, இறைவனடி சேர்ந்தார்என்றோ சொல்லாமல், அவரது மரணத்தைசாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்என்று அவரது சீடர்கள் அறிவித்தனர்.

சிந்திப்பது ஒன்றுதான் மனிதனை மனிதனாக உயர்த்திருக்கிறது.
சாக்ரடீஸ் சொன்னஉன்னையே நீ எண்ணிப் பார்என்பது எவ்வளவு பெரிய பகுத்தறிவுத் தத்துவம்?.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு 
பகிர்ந்து  கொள்கிறேன்.பிடித்திருந்தால்  நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !     

No comments:

Post a Comment