சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2013

லண்டனில் இங்கிலாந்து ராணியுடன் சோனியாகாந்தி.

லண்டனில் இங்கிலாந்து ராணியுடன் சோனியாகாந்தி.

ராணி அவர்களே, நானும் இப்போ இந்தியாவில் காந்தி நேரு வம்சத்தை சேர்ந்த ராணி.நான் தொடர்ந்து ஆட்சி புரிய ஏதாவது உத்தி சொல்லுங்களேன்.

ராணி : ரொம்ப சிம்பிள். முக்கியமானது, எப்பொழுதும் உங்களை சுற்றி புத்திசாலிகளை வைத்துக்கொள்ளவும்.

சோனியா : கலவரத்துடன், ஆனா என்னை சுற்றியிருப்பவர்களில் யார் புத்திசாலிகள் என்று எப்படி கண்டுகொள்வது?

ராணி : அது இன்னும் ரொம்ப சிம்பிள். நான் சொல்ற ஒரு புத்திசாலியான விடுகதை சொல்லி அதுக்கு விடையை கேளுங்கள், என்று சொல்லி ராணி, தன் இன்டர்காமில் "டேவிட் உள்ளே வந்து என்னை பாருங்க ப்ளீஸ் "

டேவிட் கேமரூன் உள்ளே வந்து "எஸ் யுவர் மெஜஸ்டி "

ராணி : எனக்கு இந்த புதிருக்கு விடை சொல்லுங்க டேவிட், உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு குழந்தை. அது உங்க சகோதரனோ அல்லது சகோதரியோ இல்லை. அது யாராக இருக்கக்கூடும்?

டேவிட் கேமரூன், உடனே பதிலளித்தார் "அது நானாகத்தான் இருக்கக்கூடும்"

ராணி : ஓகே டேவிட் நீங்க போகலாம் என்று சொல்லி, சோனியாவிடம் ராணி, "புரிஞ்சிட்டீங்கள. ரொம்ப சிம்பிள்".

சோனியாவும் தலையை ஆட்டிவிட்டு இந்தியா திரும்பியவுடன் மன்மொஹனை கூப்பிட்டு, மன்மோகன்ஜி, என் இந்த புதிருக்கு பதில் சொல்லுங்க. " உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு குழந்தை. அது உங்க சகோதரனோ அல்லது சகோதரியோ இல்லை. அது யாராக இருக்கக்கூடும்?

மன்மோகன் : கொஞ்சம் டைம் கொடுங்க மேம். யோசிச்சிட்டு வந்து பதில் சொல்றேன் என்று சொல்லிவிட்டு வந்து, எல்லா அட்வைசர்களையும், செக்ரட்டரிகளையும் கேட்டுப்பார்த்தார். விடை கிடைக்கவில்லை.

கடைசியில் நரேந்திரமோடியிடம் வந்து கேட்டார். அதற்க்கு மோடி "அது நான்தான்" என்றார்.

உடனே மகிழ்ச்சியில் மன்மோகன்சிங் சோனியாவுக்கு போன் போட்டு சொன்னார். "மேடம், ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு உங்க புதிருக்கு விடை கண்டுபிடிச்சிட்டேன். அது வந்து வேறு யாருமில்லை. நரேந்திரமோடியாக்கும்.

சோனியா தன் தலையில் அடித்துக்கொண்டு, யோவ் முட்டாத்தனமா சொல்லாத. அது வந்து டேவிட் கேமரூன் .

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப்  பயன்பெற்றுக் கொள்வதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.!  நல்ல  கருத்துக்களை  உங்களோடு 
பகிர்ந்து  கொள்கிறேன்.பிடித்திருந்தால்  நண்பராக இணைந்து என்னை 
ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !     



No comments:

Post a Comment