சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 May 2014

கோச்சடையான் ரிலீஸ் தள்ளி போகிறது!!!




கோச்சடையான் முடிந்தது அடுத்து தலைவர் படம் வர குறைந்தது ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்று நினைத்த ரசிகர்களுக்கு "லிங்கா" படத்தின் பூஜை போட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ரஜினி. 

ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள்



 ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காமல் கோச்சடையானின் வெளியீடு தள்ளி போயிருக்கிறது. ரஜினி உட்பட அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். தலைவரின் திரையுலக வரலாற்றிலேயே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிn ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட முதல் படம் " கோச்சடையான் " தான்.இதுவரை தலைவரின் படங்கள் வசூலை அள்ளியது தான் வழக்கம். சில படங்களின் தோல்விக்கு தானே பொறுப்பேற்று நஷ்டமடைந்தவர்களுக்கு பணத்தை வழங்கி கஷ்டத்தை போக்கிய ரஜினிக்கே இப்போது படம் தள்ளி போகிறது. 

அன்பு மகளின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினி நடிக்க சம்மதித்த படம் தான் கோச்சடையான். ஈராஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் முழுக்க முழுக்க அனிமேஷன் டெக்னாலஜியில் தயாரிப்பது என்று முடிவானது. ஆன்லைனில் சம்பாதிக்க கிளிக்குங்கள் "எனக்கு மோஷன் கேப்சர் பத்தி எதுவும் தெரியாது. முரளியும், கே.எஸ்.ரவிக்குமாரும் தான் இதை பற்றி பேசினார்கள். அதுக்கப்புறம் தான் நான் நடிக்கவே ஒத்துக்கிட்டேன் " என்று சொன்னார் ரஜினிகாந்த். அதன் பின்னர் சரத்குமார், நாசர், தீபிகா படுகோன், ஆதி என நிறைய பேரை சேர்த்து கொண்டார்கள்.


தயாரிப்பாளர் முரளி மனோகர் எடுத்த முந்தய படங்களின் கடன்களும், கோச்சடையானுக்கு முன்னமே வாங்கின அட்வான்ச்களும் சேர்ந்து தற்போது கோச்சடையானுக்கு வில்லனாக மாறிவிட்டது. மொத்த கடன் 38 கோடி. அதில் 20 கோடியை சரிகட்டிய முரளிமனோகர் மீதி 18 கோடியை கோச்சடையான் ரிலீசான பின் பார்த்து கொள்ளலாம் என்றதும் விநியோகஸ்தர்களும் ஒப்புக்கொள்ள பரபரவென ரிலீஸ் பணியில் இறங்கினர். இப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கும் நேரத்தில் தான் " இந்த படத்துக்காக ஒரு வங்கியில் முரளி மனோகர் வாங்கிய 21 கோடிக்கு வட்டியையும் சேர்த்து கட்டிவிட்டு கோச்சடையானை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என அந்த குறிப்பிட்ட வங்கி மும்பையில் உள்ள லேப் நிறுவனத்துக்கு கடிதம் அளித்தது வங்கி.




 இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி பெங்களூர் போனார். அங்கு ராக்லைன் வெங்கடேஷுடன் "லிங்கா" படத்துக்கு பூஜை போட்டு தன்னுடைய அடுத்த படத்தை துவக்கி விட்டார் ரஜினி. இப்போது மே 23 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப் பட்டாலும் அதற்குள் பிரச்சனை தீருமா என்று தெரியவில்லை.




No comments:

Post a Comment