சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 May 2014

மூத்த குடிமக்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகள்


ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளோட்டர் பாலிசிகளில் அதிகபட்சம் கணவன், மனைவி இரு குழந்தைகள் என்ற கவரேஜ் கிடைக்கும் வகையில் பாலிசிகள் உள்ளன.இந்த பாலிசிகளில் 60 வயதுக்கு மேற்ப்பட்ட மூத்த குடிமக்களுக்கு இடம் இருக்காது. ஆனால் நிறுவனங்கள் வழங்கும் குருப் இன்சூரன்ஸ் பாலிசிகளில் மூத்த குடிமக்களுக்கு கவரேஜ் கிடைக்கும்.மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலேயே பலரும் உள்ளனர். மூத்த குடிமக்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிற மாதிரி பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த பாலிசிகள் உண்மையிலேயே அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறதா, அவற்றில் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என பார்ப்போம்.

                       

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 



மூத்த குடிமக்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுக்கும்போது கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.ஏற்கனவே உள்ள வியாதிகளுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் இல்லை.தவிர இவர்களுக்கு காத்திருப்பு காலம் உண்டு. இந்த பாலிசியில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது செலவாகும் தொகையில் குறிப்பிட்ட தொகையை பாலிசிதாரரே செலுத்த வேண்டும். இது செலவு தொகையில் 15-50 சதவிகிதம் என இன்சூரன்ஸ் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். மேலும் கணவன், மனைவி இருவரும் மூத்த குடிமக்கள் என்றாலும் ஒரே ப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியாது. இருவருக்கும் தனித்தனியாகவே எடுக்க வேண்டும். 5 லட்சம் வரைதான் கவரேஜ் கிடைக்கும். ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் கட்டி புதுபித்து கொள்ள வேண்டும். என்றாலும் அதிக கிளைம் செய்திருந்தால் நிறுவனங்கள் அவர்களின் பாலிசியை புதுப்பிக்காமல் ரத்து செய்து விடுகின்றன.மூத்த குடிமக்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி தருவது அதிக ரிஸ்க் கொண்டது.இதில் கணவன், மனைவி இருவருக்கும் ப்ளோட்டர் பாலிசி வழங்கினால் அதிக கிளைம் வர வாய்ப்பு உள்ளதால் ப்ளோட்டர் பாலிசி தருவதில்லை.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

  AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys





மூத்த குடிமக்கள் பாலிசி எடுத்த பிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்றால் முதலில் உங்களின் டி.பி.ஏ யார்? அவரின் இலவச தொலைபேசி எண் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். டி.பி.ஏ நிறுவனத்துக்கு போன் செய்து உங்களின் இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு, எந்தெந்த வியாதிகளுக்கு கவரேஜ் உண்டு, கேஸ்லெஸ் வசதி எந்தெந்த மருத்துவமனையில் உள்ளது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் எந்தெந்த மருத்துவமனைகள் உள்ளன,அதில் நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால், பாலிசியில் கிளைம் பெற முடியுமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.சிகிச்சை எடுக்கும் முன் செலவு தொகையில் எத்தனை சதவிகிதம் பாலிசிதாரர் தரவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 


 மேலும் பாலிசிதாரர்கள் செய்யும் தவறுகள் என்னவென்றால் மூத்த குடிமக்களுக்கான பாலிசியை பெரும்பாலும் அவர்களின் பிள்ளைகள் தான் எடுத்து தருகிறார்கள். இதில் அவர்கள் பாலிசி புதுபிக்கும் தேதியை மறந்து விடுகிறார்கள். இதனால் மீண்டும் புதிதாக பாலிசி எடுக்க வேண்டிய நிலை வருகிறது. இதனால் ஏற்கனவே உள்ள வியாதிகளுக்கு கவரேஜ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.அதோடு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் போது அறை வாடகையை கவனிப்பது அவசியம்.ஏனெனில் கவரேஜ் தொகையில் 1 சதவிகிதம் தான் அறை வாடகையாக இருக்கும்.இது அதிகமாகும் போது கிளைம் தொகை குறைவதற்கான வாய்ப்பு உண்டு. கட்டணம் குறைவாக உள்ள தரமான மருத்துவமனைகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.பொதுவாக 60 வயதுக்குமேல் மருத்துவ தேவைகள் அதிகமாக இருக்கும்.எனவே குறைவான தொகைக்கு கிளைம் செய்யாமல் இருப்பதே நல்லது.




ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கிளிக்குங்கள் 

 

 பெற்றோர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான பாலிசி எடுத்துவிட்டோம் என்று இல்லாமல் மருத்துவ தேவைகளுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வைப்பது முக்கியம்.அதே போல எந்தெந்த வியாதிகளுக்கு எல்லாம் கவரேஜ் இல்லை என்பதையும் நினைவு வைத்து கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment