சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Nov 2012

தமிழக சட்டசபையின் வைரவிழா

 தமிழக சட்டசபையின் வைரவிழா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது.

தமிழக சட்டசபை துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதையொட்டி, சட்டசபையின் வைரவிழா இன்று நடக்கிறது. இவ்விழாவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். இதற்காக இன்று மாலை 3.30 மணியளவில் தனி விமானம் மூலம் டில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரணாப் முகர்ஜியை, சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற பிரணாப் முகர்ஜி, அங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், சி.ஐ.டி., காலனியில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வந்தார். இதைத்தொடர்ந்து தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. 

இதையடுத்து எழுந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று குஜ்ரால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சபாநாயகர் தனபால் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், கவர்னர் ரோசய்யாவுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். பின்னர் சபாநாயகர் தனபால், முதல்வர் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணசாமி கோபாலன், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என். மகாலிங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆர்.எம். பழனியப்பன் ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் பொன்னாடையும், சட்டசபை படம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கினார். 

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபை வைரவிழா மலரை வெளியிட, அதை பிரணாப் முகர்ஜி மற்றும் ரோசய்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து சட்டசபை முன்னாள் உறுப்பினர்கள் விடுதிக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் வாழ்த்துரை வழங்க, முதல்வர் ஜெயலலிதா சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத்து கவர்னர் ரோசய்யா தலைமையுரை ஆற்ற, பிரணாப் முகர்ஜி சிறப்புரை ஆற்றுகிறார். இறுதியாக துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நன்றியுரை ஆற்றுகிறார். பின்னர் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் தேநீர் விருந்து நடக்கிறது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment