சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Nov 2012

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நா.,வில் ஓட்டெடுப்பு


                   பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக, ஐ.நா.,வில் நடந்த ஓட்டெடுப்பில், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை.பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை, தனி நாடாக அங்கீகரிக்கக் கோரி போராடியவர், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத்.

           இவரது முயற்சியால் பாலஸ்தீனம் தனி நாடானது. இருப்பினும், இந்த நாடு, ஐ.நா., சபையால் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது.ஐ.நா., சபையால் தனி நாடாக அங்கீகரிக்கப்படாததால், ராணுவம் அமைப்பது, ஆயுதங்களை வாங்குவது, எல்லைகளை வரையறுப்பது போன்ற காரியங்களை, பாலஸ்தீனத்தால் செய்ய முடியவில்லை.எனவே தான், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தீர்மானத்தின் மீது, ஐ.நா., சபையில், நேற்று ஓட்டெடுப்பு நடந்தது.

             அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன.ஐ.நா., சபையில் மொத்தமுள்ள, 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட, 126 நாடுகள் அதன் இறையாண்மையை அங்கீகரித்து உள்ளன.ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளன.ஐ.நா.,வில் நிறைவேற்றப் பட்டுள்ள இந்தத் தீர்மானத்தால், பாலஸ்தீனம், சுதந்திரநாடாக அறிவிக்கப்பட்டு விட்டதாகக் கருத முடியாது.
           
               கடந்த, 67ம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுடன் தங்கள் நாட்டை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பாலஸ்தீனம் வலியுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment