இலங்கை அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு நகரில் நடந்து வருகிறது. இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
சில சமயங்களில் இலங்கை அணி வீரர்களுடன் மோதல் போக்கையும் அவர் கடைபிடிக்கிறார். இலங்கை வீரர்களுக்கு எதிராக நேற்று இஷாந்த் சர்மா வெளிக்காட்டிய ஆக்ரோஷத்தை பார்த்து, நம்மவர்களே மிரண்டு போனார்கள்.
லங்கை அணிக்கு எதிரான தொடரில் மட்டும், இஷாந்த் சர்மா களத்தில் ஆக்ரோஷமாக செயல்படவில்லை. இதற்கு முன்பும் பல போட்டிகளில் இஷாந்த் சர்மா, எதிரணி வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மலுடன் ஒரு முறை இஷாந்த் சர்மா சண்டையிட்ட சம்பவமும் நடந்துள்ளது. இலங்கை தொடரில் வெளிப்பட்ட இஷாந்த் சர்மாவின் ஆக்ரோஷத்துக்கு தண்டனையாக, ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment