சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Aug 2015

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் முரளி விஜய் அவுட்!

லங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக முரளி விஜய் விளையாட மாட்டார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி,  வரும் 12ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்  முரளிவிஜய், தொடையில் தசைபிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
எனினும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் தயாராகி விடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்னமும் தசைபிடிப்பு குணமடையாததால், முதல் டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் விளையாட மாட்டார் என்று அணி இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

முரளி விஜய்க்கு பதிலாக லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.  புஜரா,ரோகித் சர்மா, ரஹானே ஆகியோர் மத்திய களத்தில் இறங்குவார்கள். கேப்டன் விராட் கோலி 5வது விக்கெட்டுக்குதான் களமிறங்கப் போகிறார்.

வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். முதல் டெஸ்ட் போட்டியில் விஜய் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரும் இழப்புதான். வங்கதேச அணிக்கு எதிராக ஃபாதுல்லாவில் நடந்த போட்டியில் முரளி விஜய் 150 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment