இயக்குநர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தாமலேயே அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லியிருந்தார்கள். தேர்தலின்போது, புதியஅலைகள் என்கிற அமைப்பின் சார்பாக சில பதவிகளுக்கு உதவிஇயக்குநர்கள் போட்டியிடுவதாக இருந்தது. ஆதனால் தேர்தலே நடத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்டோம், அந்த அளவுக்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காக இயக்குநர் விக்ரமன் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது.
தேர்தலுக்கு முன்பாக உதவிஇயக்குநர்களிடம் பேசிய விக்ரமன், தேர்தல் போட்டியிலிருந்து எல்லோரும் விலகிக்கொள்ளுங்கள், புதிய நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன், சில புதிய பொறுப்புகளை உருவாக்கி அவற்றில் உங்களை நியமித்துவிடுகிறோம் என்று சொன்னாராம். அதேபோல நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன் பொதுக்குழுவைக் கூட்டி சொன்னபடி செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே நான்கு இணைச்செயலாளர்கள் பொறுப்பு இருந்தது.
தேர்தலுக்கு முன்பாக உதவிஇயக்குநர்களிடம் பேசிய விக்ரமன், தேர்தல் போட்டியிலிருந்து எல்லோரும் விலகிக்கொள்ளுங்கள், புதிய நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன், சில புதிய பொறுப்புகளை உருவாக்கி அவற்றில் உங்களை நியமித்துவிடுகிறோம் என்று சொன்னாராம். அதேபோல நிர்வாகக்குழு பொறுப்பேற்றவுடன் பொதுக்குழுவைக் கூட்டி சொன்னபடி செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே நான்கு இணைச்செயலாளர்கள் பொறுப்பு இருந்தது.
இப்போது இன்னொருவரைச் சேர்த்து ஐந்தாக்கிவிட்டார்கள். அந்த ஐந்தாவது பொறுப்பில் தேர்தலில் போட்டியிட முன்வந்து விலக்கிக்கொண்ட ஆ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல எற்கெனவே பனிரெண்டு செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பு இருந்தது. அதைப் பதினேழாக உயர்த்தி புதியஅலைகளில் இருந்து மூவரையும் சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவரையும் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நிர்வாகக்குழுவில் உதவிஇயக்குநர்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேறியதால் எல்லோரும் மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை பொறுப்பேற்றவுடனே நிறைவேற்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
No comments:
Post a Comment