சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jul 2015

திடீர் சந்நியாசி கோலம் ஏன்? நளினி கணவர் முருகன் பரபரப்பு பேட்டி!


ராஜீவ் படுகொலை வழக்கில் கைதாகி வேலூர் தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், முழு சந்நியாசி ஆகிவிட்டார். சிறையில் தன் அறையையே ஆன்மிகப் பீடமாக மாற்றி, எந்த நேரமும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறாராம்.

இது தொடர்பாக முருகன் தனது வழக்குரைஞர் மூலமாக ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே... 

ஏன் இந்தத் திடீர் சந்நியாசம்?

இதற்கான விதை, நான் பிறந்த இத்தாவில் கிராமத்திலேயே விதைக்கப்பட்டு விட்டது. என் தந்தை 12 வயதிலேயே தீட்சை பெற்று, அங்கு உள்ள முருகன் கோயிலுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் முழுமையான ஆன்மிகவாதியாக மாறிய பின்னர், பக்தி மார்க்கக் கருமங்களில் எங்களையும் ஈடுபடுத்தினார்.


சிறைக்கு வந்த நாளில் இருந்தே, என் மானசீக ஆன்மிகக் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகளையும் விவேகானந்தரின் போதனைகளையும் படித்துத் தியானித்தபடி இருந்தேன். ஒருகட்டத்தில் என்னை முழுமையாக ஆன்மிகத்துக்குள் இழுப்பது போல உணரவும் பயந்து பின்வாங்கி விட்டேன். பின்னர் கிருஷ்ண பக்தி இயக்க ஸ்வாமிகளான ஜெய கோவிந்ததாஸ் அவர்களின் போதனைகள், என்னை மீண்டும் ஆன்மிகத்துக்குள் அழைத்துச் சென்றன.

இதுவரை நான் வாழ்ந்த வாழ்வில் என் விருப்பங்கள், ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் போனாலும்கூட, அதை வாழ்க்கை என நம்பி எதிர்நீச்சல் எனும் அறியாமையில் உழன்று கொண்டிருந்தேன். ஆனால், இப்போது பரவசமான ஓர் உலகத்துக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். கடலைச் சேரும் நதியில் சத்தம் இல்லாமல் நடனமாடிப் போகும் ஓர் இலை போல மென்மையானவனாக என்னை உணர்கிறேன்!

நீங்கள் சந்நியாசம் பெற்றது பற்றி உங்கள் மனைவி நளினி, மகள் அரித்ரா என்ன சொன்னார்கள்?


கணவன் துறவறம் மேற்கொள்வதை, எந்த மனைவியும் விரும்ப மாட்டார். மகளும் அப்படித்தான். அவர்களைச் சமாதானப்படுத்துவது சாதாரண விஷயம் அல்ல. என் மனைவியும் தினசரி தியானத்தில் ஈடுபடுகிறவர்தான். ஆனாலும், என் ஆன்மிகப் பயண வேகத்தைக் குறைக்கப் போராடுகிறார். அது அறியாமையின் தவிப்பு. துறவறம் என்பது, குடும்பத்தை விட்டு ஓடுவது அல்ல. அதை அவரும் புரிந்து கொள்ளும் நாள் விரைவில் வரும்!

சிறையில் இருந்து விடுதலையானால் மனைவியுடன் செல்வீர்களா... அல்லது ஆன்மிகத் தேடலா?

என் ஆன்மிக வாழ்வில் இருந்து நான் இனி விலகவோ, பின்வாங்கவோ முடியாது. ஏனென்றால், திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு வெகுதூரம் வந்துவிட்டேன். ஆனால், என் மகள், என் சகோதரர்கள், உறவினர்கள் துணைகொண்டு என்னை திசை திருப்பலாம் என நினைக்கிறார் நளினி. எல்லாம் அவன் செயல்!



No comments:

Post a Comment