உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்துக்கு முன் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் இந்திய அணி சிங்கிள் வெற்றிக்காக ஆஸ்திரேலியாவில் அலைந்தது என்று ஆணவத்துடன் பேசியது இந்திய ரசிகர்களுக்கு வெறுப்பேற்றியதை மறந்திருக்க முடியாது.
ஆனால் அதே மேக்ஸ்வெல் இந்திய ஜாம்பவான் சச்சின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி முடிந்தவுடன் மெல்பர்ன் மைதானததில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து தொலைக்காட்சிக்கு மேக்ஸ்வெல் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் பரிசளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஐ.சி.சி நிர்வாகிகளுடன் சச்சின் வந்து கொண்டிருந்தார். சச்சினை பார்த்ததும் மேக்ஸ்வெல் பேட்டி கொடுப்பதை விட்டு ஓடி வந்து, சச்சினை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். ஆஸ்திரேலியர்கள் களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் திறமைசாலிகளை மதிக்க ஒரு போதும் தவறுவதில்லை.
No comments:
Post a Comment