சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jan 2015

சத்தம்போடாமல் வா...’ கிழக்கு ‘திகில்’ கரை சாலை


னிமையைத் தேடும் காதலர்களுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கைப் பாடம்!
கடந்த 22-ம் தேதி இரவு செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், ''நான் எனது காதலனுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை பீச்சில் பேசிக்கொண்டு இருந்தபோது, போலீஸ் என்று சொல்லி ஒருவர், என்னிடம் விசாரித்தார். பிறகு என்னை மட்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வருமாறு பைக்கில் அழைத்துச் சென்றார்

திடீரென மெயின் ரோட்டை விட்டுப் பிரிந்து ஒரு தெரு வழியாக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குள் பைக் சென்றது. இதைப் பார்த்து நான் கூச்சலிட்டதும், 'சத்தம்போடாமல் வா... இல்லைன்னா உன்னையும், அவனையும் கொன்னுடுவேன்னு அந்த நபர் மிரட்டினார். அதோடு அந்தப் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் என்னை பலாத்காரம் செய்துவிட்டு மீண்டும் மெயின் ரோட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு மாயமாகிவிட்டார்'' என்று அந்தப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார். இதுவரை அதிரடி ஆட்களாக வந்தவர்கள், இப்போது போலீஸ் உடையில் வர ஆரம்பித்துவிட்டார்கள். இது போலீஸுக்கே அதிர்ச்சியாக இருந்தது. யாரோ ஒரு போலீஸ்காரர் அத்துமீறலாகத்தான் இருக்கும் என்று போலீஸே சந்தேகப்பட்டது.

இதுதொடர்பாக செம்மஞ்சேரி போலீஸார் முதல்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, சம்பவம் நடந்த இடம் நீலாங்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்டதால், அந்தப் பெண்ணை அங்கு அனுப்பி வைத்தனர். நீலாங்கரை போலீஸாரிடம் இந்தத் தகவலை மீண்டும் அந்தப் பெண் சொன்னார்.
.சி.ஆர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் டியூட்டிக்கு வராமல் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் அவரைத் தொடர்புகொண்டபோது அவர், அந்த நேரத்தில் வேறொரு இடத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதற்கிடையில் அந்தப் பெண் கூறிய இடத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பெண் ஒருவருடன் பைக்கில் செல்லும் படம் பதிவாகி இருந்தது

இதற்கிடையில் அந்தப் பெண்ணை போலீஸார் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அன்றைய தினம் அந்தப் பெண்ணின் விருப்பத்தின் பேரில் செக்ஸில் ஈடுபட்டு இருப்பதாகவும் யாரும் ரேப் செய்யவில்லை என்றும் டாக்டர்கள் ரிப்போர்ட் கொடுத்தனர். இது போலீஸாருக்குக் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 'காதலனுடன் உடலுறவு கொண்டுவிட்டு அதனை மறைக்க அந்தப் பெண் முயற்சிக்கிறார்என்று கூட போலீஸார் சந்தேகப்பட்டனர். ஆனால் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது அந்தப் பெண்ணின் காதலன் அல்ல என்பதையும் போலீஸ் உறுதிப்படுத்திக் கொண்டது. கேமராவில் பதிவானவர் யார் என்று தேடியபோதுதான் அருள்மொழி என்பவர் சிக்கியிருக்கிறார். இவர் சோழிங்கநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றது இவர்தான் என்று போலீஸார் சொல்கிறார்கள்.

வழக்கை விசாரிக்கும் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் பேசினோம். ''அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம். விசாரணையில் அந்தப் பெண்ணும், அவளது காதலனும் சென்னை புறநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படிக்கின்றனர். இவர்கள் அடிக்கடி இப்படி தனிமையைத் தேடுவதை அருள்மொழி என்பவன் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறான். இந்த ஜோடி தனிமையில் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்த பிறகு, அதை வெளியில் சொல்லிவிடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை அழைத்துப்போய், அந்தப் பெண்ணிடம் அத்துமீறியிருக்கிறான். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்று சொன்னார்.

குற்றவாளியை கைது செய்வதற்கு முன்புவரை தனக்கு வீட்டில் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்வதைத் தடுக்கவே அந்தப் பெண் இப்படி டிராமா செய்கிறார். அவரை யாரும் கடத்தவில்லை என்றே போலீஸ் சொல்லி வந்தது. மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணின் விருப்பத்தின் பேரில் செக்ஸில் ஈடுபட்டதாக ரிப்போர்ட் வந்தது எப்படி என்று போலீஸார் விசாரித்தபோது, 'கடத்தப்படுவதற்கு முன்பே நானும் என்னுடைய லவ்வரும் சந்தோஷமாக இருந்தோம்என்று அந்தப் பெண் சொன்னதாகச் சொல்கிறது போலீஸ்.

சென்னை கடற்கரையில் ஒரு பெண்ணை, போலீஸ் உடையில் வந்த ஒருவர் கடத்துகிறார்... அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, விரும்பித்தான் உடலுறவு வைத்துக்கொண்டார் என்று முதலில் சொல்கிறது போலீஸ்... நான் கடத்தப்படுவதற்கு முன்பு என் காதலனுடன் சந்தோஷமாக இருந்தேன் என்கிறார் ஒரு பெண்.... எங்கே போகிறது நாடு?!




No comments:

Post a Comment