சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Feb 2013

நான் உனக்கு ஒட்டு போடவில்லை,அதனால் நீ எனக்கு முதலமைச்சர் இல்லை


       இது ஒரு முக்கியமான ( விஸ்வரூபத்தை விட ) பிரச்சனை.திருப்பூர் மாநகராட்சி  60 வது வார்டு கவுன்சிலர் ஆனந்தன் அந்த வார்டை சேர்ந்த குளத்துபுதூர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாது என கூறியுள்ளார்.அதுவும் பல பேர் முன்னிலையில் பொது இடத்தில் .அதற்க்கு காரணம் என்னவென்றால் மாநகராட்சி தேர்தலில் அந்த பகுதி ( குளத்துபுதூர் ) பொது மக்கள்  அவருக்கு ஓட்டு போடமால் வேறு ஒருவருக்கு போட்டு விட்டனராம்.அதனால் உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கமுடியாது என கூறியுள்ளார்.மேலும் நீ எவன்கிட்ட வேணாலும் போய்  சொல்லிக்கோ என்று தெனாவெட்டாக கூறியுள்ளார்.
வேறு யாரிடம் சொன்னாலும் நியாயம் கிடைக்காது.கடந்த 2 மாதங்களாக காசுக்கு லாரியில் தண்ணீர் வாங்கி உபயோகபடுத்துகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வே அதிக இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது. இதற்கு கவுன்சிலர் ஆனந்தன் மேல் புகார் அளிக்க வேண்டும் என்றால் மேயர் விசாலட்சியிடமோ அல்லது எம்.எல். பரமசிவம் அவர்களிடமோ தான் புகார் அளிக்கவேண்டும்.அதற்க்கு மேல் என்றால் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களிடம்  தான் புகார் அளிக்க வேண்டும்.
இவர்கள் அனைவருமே அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள்.புகார் அளித்தால் எப்படி தன் கட்சியை சார்ந்தவர் மேல் நடவடிக்கை எடுப்பார்.அதில்லாமல் கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைவருமே மக்களுக்காக தான் வேலை(சேவைஅல்ல) பார்ப்பவர்கள்.இதில் எனக்கு ஓட்டு போட்டவர் போடாதவர் என பார்த்து செயல்பட முடியுமா?அது நியாயமா ? இவர்களை கேள்வி கேட்பது யார் என தெரியவில்லை.


           ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் நான் ஓட்டு போடவில்லை.அதற்காக அவர் எதோ காரணத்துக்காக என்னை கைது செய்ய உத்தரவிட்டால் "நான் உனக்கு ஒட்டு போடவில்லை,அதனால் நீ எனக்கு முதலமைச்சர் இல்லை,எனவே நீ  என்னை கைது செய்ய உனக்கு உரிமை இல்லை " என நான் கூறலாமா? இது தவறு என்றால் ஆனந்தன் சொல்வது தவறு.இது சரி என்றால் நாங்கள் ஆனந்தனிடம் சென்று குடிநீர் கேட்கமாட்டோம்.ஆனால் அதன்பின் அவர்கள் நிலைமை என்னவாகும் என சிந்திக்க வேண்டும்.

                       "காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டிங்க?" அப்படின்னு கேட்கலாம்."நீ  என்ன எங்களுக்கு சேவை செய்யவா தேர்தல்ல நிக்கிற,உன் சொந்த காச முதலா போட்டு மக்களோட வரி பணத்தை கூட்டா சேர்ந்து கொள்ளையடிக்க போறீங்க"னு சொல்லணும்.இனிமேல் எந்த அரசியல்வாதியும்,வார்டு மெம்பர் முதல் அமைச்சர்,முதலமைச்சர் வரை யாரும் இதுபோன்று பேசக்கூடாது.மக்கள் குறை கூறினால் நீ எனக்கு ஓட்டு போட்டியா?உன்னாலதான் நான் பதவிக்கு வந்தேனா? என "எவனும் ( எவளும் ) " பேசக்கூடாது.இது என் பகுதியோடு முடிந்து போகிற பிரச்சனை இல்லை.தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான்.இது மாற வேண்டும்.நாம் தான் மாற்ற வேண்டும்.அதற்க்கு முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்


1 comment:

  1. படித்தவர்கள் யாருக்கும் புரியவில்லையா? அல்லது கருத்து சொல்ல தைரியம் இல்லையா?

    ReplyDelete